ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

முட்கள்


முட்கள் 

உன்னை வரித்துக் கொண்ட 
பேருவகைக்காய் 
காடெங்கும் 
வெறும் பாதத்தால் 
நடக்க வைக்கின்றாய் 

வெளிர்நிறப் பட்டாம்பூச்சிகள்
கூடப் பறந்து வரும் 
கனவுச் சிறகொடித்து 
விழிமுத்துக் கோர்த்து 
மாலை சூட்டுகிறாய் 

நாளை 
என்மீது வெளிர்நிற 
ஆடை போர்த்து 
வண்ணப் பூவிதழ்கள் 
தூவி மகிழ்வாயென 
கனவில் தேவதூதன் 
உரைத்ததில் மலர்கிறேன்.











வி. அல்விற்.
09.08.2014.

கருத்துகள் இல்லை: