முட்கள்
உன்னை வரித்துக் கொண்ட
பேருவகைக்காய்
காடெங்கும்
வெறும் பாதத்தால்
நடக்க வைக்கின்றாய்
வெளிர்நிறப் பட்டாம்பூச்சிகள்
கூடப் பறந்து வரும்
கனவுச் சிறகொடித்து
விழிமுத்துக் கோர்த்து
மாலை சூட்டுகிறாய்
நாளை
என்மீது வெளிர்நிற
ஆடை போர்த்து
வண்ணப் பூவிதழ்கள்
தூவி மகிழ்வாயென
கனவில் தேவதூதன்
உரைத்ததில் மலர்கிறேன்.
09.08.2014.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக