பஞ்சுப் பரப்பின் மீதானதொரு மேலுலகை
எனக்காய் நான் படைத்துள்ளேன்
என் கனவுகள்
என்னோடு துரத்தி விளையாடுவதற்காய்
உன் கீறல் விழுந்த குரலை
கேட்க விரும்பாதபடி
ஒளிக்கதிர்களுக்குள் புதைந்து
என்னை ஒளித்துக் கொண்டுள்ளேன்
வந்து விடலாம்!
மழைக் கழுவுதலின் பின்னான
வானவில் பூத்த
கதிரொளித் தெளிவான வார்த்தைகளை
உன்னால் சுமந்துவர முடியுமானால்
என்னோடு உன்னைச்
சேர்த்துக் கொள்ளுகின்றேன்.
வி.அல்விற்.
27.08.2014.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக