புதன், 3 டிசம்பர், 2014

கல்லறைக் காதைகள்.

கல்லறைகள்
கனம் இறக்க
கதவகற்றிச் சில
காதோடு தம்
காதை பல
பேசி விடின்
சில்லறைகள்
சிதறி விடும்
சொல்லியங்கள்
தடம் புரளும்
பல்லக்கில் ஏறியோர்
பாதங்களும் துவண்டுவிழும்
உள்ளேயே வாழ்ந்திடுங்கள்
உள்ளங்கையில் மலரேந்தி
உள்ளத்தில் உமையேந்தி
உண்மையாய் நினைப்போர்
உள்ளனர் இன்னுமென்றெண்ணி.

வி. அல்விற்.
27.11.2014.

கருத்துகள் இல்லை: