புதன், 3 டிசம்பர், 2014

எழுகை.

இடிப்பது கட்டுவதற்கும்
குலைப்பது ஒழுங்கமைக்கவும்
கொத்துவது பண்படுத்தவும்
புதைப்பது மீள் உரமாயும்
மாறுகையில்....
சிதைவில்லா பெறுமதி
பெருஞ்சுவராய் எழுகிறதே!

இடித்துக்கொண்டே இருங்கள்
தனித்தனிச் சுவர்கள்
பெருங்கோட்டையாய்
எழட்டும்.

வி. அல்விற்.
03.11.2014.

கருத்துகள் இல்லை: