புதன், 3 டிசம்பர், 2014

இன்னும்

நாட்களின் பதகளிப்பில்
கனமாய் ஊர்கின்றன
வினாடி முட்கள்
பேரொலியுடன்.
இடியுடனான மழையிலும்
பேய்ச்சுழற்சிக் காற்றிலும்
நனைந்தும் அலையுண்டும்
உதறலுடன் நிற்கையில்
மீந்தொலிக்கின்றது
வினாடி முள்
முன்னே நகர விடாது.
இந்த அலைச்சலும் கூட
சுகமானது போல
சமாதானப்படும் தன்னிரக்கத்துடன்
இன்னும் நின்றபடியே.......

வி. அல்விற்.
25.11.2014.

கருத்துகள் இல்லை: