பனி இறுக்கியிருக்கும்
இந்த உறை தேசம்
என்னை மூடி விடாதபடி
செழுந்தமிழ் மொழியாள்
இதமாய் என் நுதல் வருடி
தன் இளஞ்சூட்டில்
துயில் கொள வைத்து
காலச்சிறகடிப்பில்
நொந்து விடாவண்ணம்
தூக்கி நிறுத்தினாளே
என்னடி செய்வேன்
நின் துணையன்றி
என் விரல்கள் அசையுமோ
நின் கண்ணசைவின்றி
என் காலம் நிற்குமோ
தருவாய் நலம் பெற யாவும்
அருள்வாய் அகிலம் வாழ
கருவாய் எழுத்தில் கனிவாய்
உருவாய் உள்ளத்தில் நிறைவாய்
நின்னடி போற்றி வணங்குகிறேன்
என்னைக் காத்தருள்வாய்
காலத் துவழ்ப்பின்
குறை களைந்து மீண்டுன்
தாயாய் சேயாய்
சதிபதியாய்
பிரிந்திணையும் காதலராய்
உற்ற ஞெலுவராய்
அவர் பால்
நின் புகழ் ஏற்றிட
காலக்கணக்கின்றி
என்னோடு கனன்றிரு.
வி. அல்விற்.
01.01.2015.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக