புதன், 9 செப்டம்பர், 2015

அரங்கேற்றம்.

அரங்கேற்றம்.

ஐரோப்பிய நாடுகளில் கலை வளர்க்க ஆர்வம் கொண்டு பிள்ளைகளை இழுத்துக் கொண்டு ஓடும் பெற்றோர் அதிகமுண்டு. பள்ளிப்படிப்பு, விளையாட்டுக்கள், தமிழ்ப் பாடசாலை, கலை என்று  பிள்ளைகளும் ஆர்வத்துடன் தான் ஓடி ஓடிக் கற்றுக்கொள்ளுகிறார்கள். இதனைத்தவறு என்று சொல்ல முடியாது. நாங்கள் மட்டுமல்ல, ஐரோப்பியர்களும் இந்த மாதிரியான ஓய்வு நேர கலை அல்லது பொழுது போக்கு விடயங்களைப் பின்பற்றுவதுண்டு விருப்படிப்படையில். ஆனால் இரட்டைக் கலாச்சாரப் பின்னணிக்குள் இருக்கும் நமக்கு இவை கொஞ்சம் கூடுதலாக இருக்கிறது.
கலையைப் பொறுத்தவரை குறிப்பிட்ட காலப் படிப்பின், கற்பவரின் திறனை மதிப்பிடும் ஆசிரியர், தனது    இத்தனை காலக் கற்பித்தலில், கற்றவர் குறிப்பிடத்தக்க நிலையை அடைந்துள்ளார் என்று உரைக்க, அந்நேரம் எழுகிறது 'அரங்கேற்றம்' எனும் (குறிப்பாக நடனத்துக்கு) நிகழ்வுக்கான ஆரம்பம்.
மறுக்க முடியாத பல உண்மைகளை இது தாங்கி நிற்கிறது. மிகுந்த கற்பனைகளையும், போட்டிகளையும், தாங்க முடியாத வீண் செலவுகளையும் இந்த அரங்கேற்றங்களில் காணலாம்.
சரி, இவை அனைத்தையும் ஏற்றுச் செய்கிறோமே, கற்றுக்கொண்டவர் ஏதாவது தான் கற்றதைப் பயன் படுத்துகிறாரா? என்றால் அதுவும் கேள்விக் குறியே. மிகச் சிலரே பயன் கொடுக்கிறார்கள்.கும

அப்படியாயின் இத்தனை ஆடம்பரங்களும் செலவுகளும் ஏன்?

அண்மையில் நோர்வேயில் ஒரு வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவர்களது மகளின் நடன அரங்கேற்ற நிழற்படத் தொகுப்பைக் காட்டினார்கள். அழகாகவும் பார்க்க மகிழ்ச்சியாகவும் இருந்தது. ஆறு மாணவிகளை ஒரே மேடையில் அரங்கேற்றியிருக்கும் அவர்களுடயை ஆசிரியையைப் பாராட்டாமல் இருக்க முடியாது. ஒத்துழைத்த பெற்றோரும்  மாணவிகளும் பாராட்டுக்குரியவர்களே!

இத்தகைய முறையை அனைவரும் பின்பற்றினால் என்ன? செலவு குறைவு என்பது மட்டுமல்ல, இது ஒரு கூட்டு முயற்சிக்கும் எடுத்துக்காட்டாகும்.
ஆசிரியர்களும், பெற்றோரும், மாணவர்களும் இது பற்றி சிந்திக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை: