இது இலையுதிர் காலம்
காம்புகள் பற்றிப் பிடிக்கும் வலுவிழந்து
முற்றிய இலைகள் கரணியத்தோடு
பழுத்து நிறம்மாறி உதிர்கின்றன
மிதிபட்டு உருக்குலைந்து
இயற்கை உரமாயெழும் கட்டளைப்படி
கவனிப்பாரற்ற இலைகளிழந்த மரங்களோ
சுய பச்சாத்தாபத்துக்கு ஆளாகுவதில்லை
காத்திருக்கும் வசந்தம் வரை
பசுமையேந்தி தன் கடன் செய்ய....
வி.அல்விற்.
13.11.2013.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக