ஞாயிறு, 17 நவம்பர், 2013

இலையுதிர் காலம்

இது இலையுதிர் காலம் 
காம்புகள் பற்றிப் பிடிக்கும் வலுவிழந்து 
முற்றிய இலைகள் கரணியத்தோடு 
பழுத்து நிறம்மாறி உதிர்கின்றன
மிதிபட்டு உருக்குலைந்து 
இயற்கை உரமாயெழும் கட்டளைப்படி 
கவனிப்பாரற்ற இலைகளிழந்த மரங்களோ 
சுய பச்சாத்தாபத்துக்கு ஆளாகுவதில்லை 
காத்திருக்கும் வசந்தம் வரை 
பசுமையேந்தி தன் கடன் செய்ய....

வி.அல்விற்.
13.11.2013.

கருத்துகள் இல்லை: