நிரந்தரமில்லா வாழ்வுக்குள் ஒரு நிறைவிருந்தது
நீண்ட கனவை நிறைவேற்றும் நிறை வது - உன்
பசியும் தாகமும் அதுவேயாக இருந்தது
மௌனமும் புன்னகையும் பிரியாதிருந்தது
என்றென்றைக்கும்.......
நினைவழியாக் காலங்கள்
நிழலாய்த் தொடர்கின்றன உள்ளகத்தே
நீதி கண் மூடி வாய் பொத்தி இருக்கின்றது
சட்டங்களுக்குள் மாறிக் கொண்டிருக்கின்றன காட்சிகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக