ஒரு கோடு கீறப்பட்டுள்ளது
ஆழமாகவே
என் தனிமையும்
சிந்தனைகளும்
உன் எதிர்வினைகளும்
இறுமாப்புக்களும்
கடந்து வந்து
அழித்திடாதபடி
சாட்சிகளில்லா இரவுகள்
பகல்களை விழுங்கியபடி
காலம் நீண்டதோர்
பாதையை
முடிச்சவிழ்க்க விரும்பாமல்
முனகிக் கரைகின்றது
மௌனங்களில் ஆழ்ந்துள்ள
மீதியுள்ள கொள்ளளவில்
சமூகத்தின் பெயரால்
சுய அழிப்புச்
செய்து கொண்டிருக்கிறேன்
விரும்பாமலேயே.
வி.அல்விற்.
04.09.2014.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக