வெள்ளி, 5 செப்டம்பர், 2014

சமூகத்தின் பெயரால்


ஒரு கோடு கீறப்பட்டுள்ளது 
ஆழமாகவே 
என் தனிமையும் 
சிந்தனைகளும் 
உன் எதிர்வினைகளும் 
இறுமாப்புக்களும் 
கடந்து வந்து 
அழித்திடாதபடி

சாட்சிகளில்லா இரவுகள்
பகல்களை விழுங்கியபடி 
காலம் நீண்டதோர் 
பாதையை 
முடிச்சவிழ்க்க விரும்பாமல் 
முனகிக் கரைகின்றது 

மௌனங்களில் ஆழ்ந்துள்ள 
மீதியுள்ள கொள்ளளவில் 
சமூகத்தின் பெயரால்
சுய அழிப்புச் 
செய்து கொண்டிருக்கிறேன்
விரும்பாமலேயே.



வி.அல்விற்.
04.09.2014.

கருத்துகள் இல்லை: