கடத்தல்
நினைக்கிறேன்
எட்டிக் கால்களை வைத்து
இடறுபடும் அனைத்தையும்
கடக்க நினைக்கிறேன்
தனியே கடந்து விடுவேன்
என்பதே பொய்மையாயிருக்கிறது
என்னை நானே
ஆற்றிக் கொள்ளுமாப்போல
என் தனிமைச் சுமையையும்
கூடவே இறுக்கியிருக்கும்
பந்தச் சுவரையும்
கடந்து விடுதல்
அருவியென ஆழ்கடலில்
கால் வைத்தாற் போன்ற
பயத்தைத் தருகிறது
மூளையின் எங்கோ ஒரு பதிவில்
சிவப்பு விளக்கு
அடிக்கடி எரிந்து அணைகின்றது
எச்சரிக்கையாயிருக்கும்படி
என்னில் மட்டுமே
கடந்து விட்டேன் எனும்
மாய மயக்கத்தில்
தலை நிமிர்த்தும் போது
நூலிழைகளில்
மீண்டும் சிக்கிக் கொள்ளுகையில்
என் பலவீனம்
பலமாய்ச் சிரிக்கிறது
என்னைப் பார்த்து
கடத்தல் என்பது
இறுதிப் பயணமாய் இருக்குமோ?
வி. அல்விற்.
15.09.2014.
15.09.2014.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக