செவ்வாய், 23 செப்டம்பர், 2014

இங்கேயும் கூட

இங்கேயும் கூட
தவித்துப் போகிறது மனம் 
நேரம் கடந்து 
மெல்ல நகர்கையில் 
தவிப்பு பிசைய 
தொண்டை வறண்டு போய் 
அச்சம் உள்ளே பரவத் தொடங்குகிறது

தொலைபேசித் துண்டிப்பில் 
கலங்குகிறது மூளை 
தெய்வங்களின் பெயர்கள் 
தன்னாலே நாவில் 
வரிசை கட்டுகின்றன

கற்பனை கட்டவிழ்கிறது 
கண்முன்னே 
செய்திகளும் படங்களுமாய்
அடிவயிற்றில் நோவெடுக்கிறது 
பெற்றெடுத்த பொழுதைவிட

பிள்ளைகள் தொலைவது 
யுத்த பூமியில் மட்டுமல்ல 
இங்கேயும் கூட.




                                                                                                                                         வி.அல்விற்.
                                                                                                                                     23.09.2014.

கருத்துகள் இல்லை: