இங்கேயும் கூட
தவித்துப் போகிறது மனம்
நேரம் கடந்து
மெல்ல நகர்கையில்
தவிப்பு பிசைய
தொண்டை வறண்டு போய்
அச்சம் உள்ளே பரவத் தொடங்குகிறது
தொலைபேசித் துண்டிப்பில்
கலங்குகிறது மூளை
தெய்வங்களின் பெயர்கள்
தன்னாலே நாவில்
வரிசை கட்டுகின்றன
கற்பனை கட்டவிழ்கிறது
கண்முன்னே
செய்திகளும் படங்களுமாய்
அடிவயிற்றில் நோவெடுக்கிறது
பெற்றெடுத்த பொழுதைவிட
பிள்ளைகள் தொலைவது
யுத்த பூமியில் மட்டுமல்ல
இங்கேயும் கூட.
வி.அல்விற்.
23.09.2014.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக