பொழுதுகள்
முன்னர்
எப்போதும் ஒரு பதில் இருந்தது
மழைக்காலங்களும்
பனிமூட்டங்களும்
அடர்ந்திருந்த நேரத்தில்
நெருங்கியிருந்த பொழுதுகள்
வார்த்தைகளற்ற பதில்களை
பசியறிந்தூட்டும் தாயாய்
அள்ளி வழங்கியிருந்தது
இப்போதோ
பதில்களற்ற பொழுதுகள்
அச்சமூட்டுகிறன
வானம்
அழுத்தித் துடைக்கப்பட்டிருந்தும்
முன்னெப்போதும் இருந்ததை விட
நட்சத்திரங்களை எண்ணுவது
கடினமாகவேயுள்ளது
நீயற்ற நேரத்தில்.
வி.அல்விற்.
07.07.2014.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக