சனி, 26 ஜூலை, 2014

பொழுதுகள்


பொழுதுகள் 

முன்னர் 
எப்போதும் ஒரு பதில் இருந்தது

மழைக்காலங்களும் 
பனிமூட்டங்களும் 
அடர்ந்திருந்த நேரத்தில் 
நெருங்கியிருந்த பொழுதுகள் 
வார்த்தைகளற்ற பதில்களை 
பசியறிந்தூட்டும் தாயாய் 
அள்ளி வழங்கியிருந்தது 

இப்போதோ 
பதில்களற்ற பொழுதுகள்
அச்சமூட்டுகிறன 

வானம் 
அழுத்தித் துடைக்கப்பட்டிருந்தும் 
முன்னெப்போதும் இருந்ததை விட 
நட்சத்திரங்களை எண்ணுவது 
கடினமாகவேயுள்ளது 
நீயற்ற நேரத்தில்.

வி.அல்விற்.
07.07.2014.

கருத்துகள் இல்லை: