திசைகாட்டிகள்.
மரங்களும் மலர்களும்
மழையும் அருவிகளும்
மழையும் நனைவும்
மதியும் வானும்
இவர்களையும்
மகிழ்வித்து மலர்ந்தவைதான்
இயற்கை வாரிக் கொண்டு
இவர்களைக் காவிச் செல்கையில்
இடம்மாறா நினைவுகளை
இருத்தி விட்டுச் சென்றவர்கள்
எப்போதைக்கும்
தீக்குழம்பின் பிரவாகத்தில்
தீய்ந்தும் தீயாதவர்கள்
தீண்ட முடியாத் தூரத்தில்
தீச்சுடர்களே அவர்கள்
எப்போதைக்கும்
திசைகள் இப்போதைக்குத்
திகைத்துக் கிடப்பினும்
திரும்பும் பாதைகள்
தூர்ந்து கிடப்பினும்
தெறிகெடு நிலையழிக்கும்
திசைகாட்டிகள் அவர்கள்
எப்போதைக்கும்.
வி.அல்விற்.
02.07.2014.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக