வார்த்தை
உன் உள்ளிருந்து
பிறப்பெடுக்கும்
உன் எண்ணக்குவியல்
கோர்த்துக் கொள்
ஒவ்வொன்றாக
பெறுமதியான முத்துக்களை
மாலையாய்க் கோர்ப்பதை விட
அதீத கவனத்தோடு
வாய்ச் சிலம்பொன்று
முன்னிருப்பின்
அது தப்பித்துக் கொள்ளும்
நினைத்துப் பார்
ஒட்டமுடியாமல் சிதறும்
கண்ணாடி ஒன்றில்
உன் கல்லெறி படின்?
உன் மறுமுகம் கிழிவதும்
துக்கங்கள் தொடர்வதும்
வருத்தங்கள்
குட்டையில் தேங்கிய நீராவதும்
உன் கையிலேதான்.
வி. அல்விற்.
12.07.2014.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக