சனி, 26 ஜூலை, 2014

வார்த்தை

வார்த்தை 

உன் உள்ளிருந்து 
பிறப்பெடுக்கும் 
உன் எண்ணக்குவியல் 

கோர்த்துக் கொள் 
ஒவ்வொன்றாக 
பெறுமதியான முத்துக்களை 
மாலையாய்க் கோர்ப்பதை விட 
அதீத கவனத்தோடு 

வாய்ச் சிலம்பொன்று 
முன்னிருப்பின் 
அது தப்பித்துக் கொள்ளும் 

நினைத்துப் பார் 
ஒட்டமுடியாமல் சிதறும் 
கண்ணாடி ஒன்றில் 
உன் கல்லெறி படின்?

உன் மறுமுகம் கிழிவதும் 
துக்கங்கள் தொடர்வதும் 
வருத்தங்கள் 
குட்டையில் தேங்கிய நீராவதும் 
உன் கையிலேதான்.




வி. அல்விற்.
12.07.2014.

கருத்துகள் இல்லை: