சனி, 26 ஜூலை, 2014

நெஞ்சு நிறைய..


நெஞ்சில் நிறைந்தோர்.

இருட்டிலும் வாழும் 
வரம் தந்து சென்றவர்கள் 
அவர்கள் 

இலக்கு ஒன்றையே 
இதயங்களில் தாங்கி
இறவாப் புகழோடு 
உதிர்ந்து போனவர்கள் 

இடித்துரைக்கும் நாக்களையும் 
இறுக வைத்தொரு கணம் 
தலை சாய்த்தும் 
இறுதிக் கணம் 
சிந்திக்க வைப்பவர்கள் 

இன்றைக்கும் என்றைக்கும் 
ஒளியாகி வழியாகி 
இருட்டிலும் வாழும் 
வரம் தந்து சென்றவர்கள் 
அவர்கள்.

வி. அல்விற்.
05.07.2014.

கருத்துகள் இல்லை: