நீ
சிணுங்கினால் அழகு
மெல்ல
முகிழ்நகை பூத்தால்
கொள்ளை அழகு
வாய்விட்டு நகைப்பின்
அதனிலும் அழகு
மனம் நனைத்து
நிலம் குளிர்த்தி
நீர்த்துளிகளை
சற்றே ஒளியில் கண்சிமிட்ட
வைக்கும் தேவதையே
கொஞ்சம்
நிறுத்திக் கொள்ள மாட்டாயா
உன் சிணுங்கல்
கொஞ்சம் அதிகமாகி
போர்வைக்குள்
புகை மூட்டத்தை நிரப்பி விடுகிறதே!
12.07.2014.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக