சனி, 30 மே, 2015

எமது திருமணநாள் (28 மே).

இளைய சமுதாயம் அழகாகச் சிந்திக்கிறது.

"இன்னும் நிறைய சண்டைகள் போட்டு, 
இன்னும் நிறைய வருடங்கள் வாழ வாழ்த்துகிறேன்"

(எமது திருமண நாளான நேற்று எமது மகனின் எமக்கான வாழ்த்து இது).


இன்று போல தெரிகிறது 
    அந்த நாள் 
இன்று வரை மாற்றமில்லை
    அந்த நாள் 
அன்று தொடங்கியதாகவே
    சந்து பொந்துகளினூடே
சென்று கடக்கின்றது
    விந்தையான மணவாழ்வு 
மென்று முழுங்கிய நாட்களும் 
    கந்தலாகி விடவில்லை
கொன்று போட்டும் விடவில்லை
    எந்தை தாய் நினைந்து
வென்று கொண்டிருக்கிறோம் 
    வந்த வாழ்வை வரமாய்.


வி. அல்விற்.

கருத்துகள் இல்லை: