வெள்ளி, 16 நவம்பர், 2012

என்னினமே!

தேகம் பற்றி எரிகிறது
அனல் காற்று பேயாய் வந்து
சூழ்ந்து கொழுத்துகின்றது
பிணந்தின்னிகள் எழுந்து
கைநீட்டி இளிக்கின்றன

ஒ! என்னினமே!
சபிக்கப்பட்ட இனமாய்
ஈனப்பட்டு நிற்கின்றாயே!
இரக்கமில்லா அரக்கத்தனம்

எப்படி உன்னுள் புகுந்து கொண்டது?

நிம்மதி உனக்கில்லை
வாழ்வு உனக்கில்லை
விடிவு முனக்கில்லை
இரத்தவாடை முகர்ந்தபடி
காட்டுமிராண்டியாய்
இப்படியே நீ இருந்து விடு!

அறிவாளி என்று கூறாதே!
அதற்கும் உனக்கும் வெகுதூரம்
காட்டுமிராண்டித்தனம்
மிக நன்றாகப் பொருந்துகின்றது
அதையே போர்வையாக்கிக் கொள்!

கருத்துகள் இல்லை: