வெள்ளி, 30 நவம்பர், 2012

அழிந்து போகட்டும்!

படு பாவி உன்னைப் பெற்றவள்
மலடாயிருந்திருக்கலாம்!!
பூமித்தாய் மகிழ்ந்திருப்பாள்
உன் கால் பட்ட இடமெல்லாம்
கருகிக் கிடக்கும்
உன் வாய் அழுகிப் போகட்டும்
உன் நா பேச்செழாமல்
செத்துக் கிடக்கட்டும்
உன் காதுகள் அடைத்துப் போகட்டும்
கண்ணிரண்டும் குருடாகி

இருட்டிலே கிடக்கட்டும்
கையிரண்டு இழந்து நீ
அலைந்து திரிய வேண்டும்
காலிரண்டும் இழந்து
வெறும் சதைப் பிண்டமாய்
உருள வேண்டும்
நீ சாகும் நேரம்
தாகத்தால் தவித்துச் சாவாய்
தனியே யாருமின்றி
ஏங்கிச் சாவாய்
உன் உடல் விலங்கும் வேண்டாது
உருக்குலைந்து போகட்டும்
உன் சந்ததி இத்தோடு
வேரறு படட்டும்!
உன்னைச் சார்ந்த அனைத்தும்
அழிந்து போகட்டும்!
வயிறெரிந்து சொல்லுகிறேன்
உன் சந்ததி இத்தோடு நிற்கும்!

கருத்துகள் இல்லை: