செவ்வாய், 29 ஜனவரி, 2013

திருமணம்


இளவேனில்  இளஞ்சிரிப்பில்
இடம்மாறி இதயங்கள்
இதையன்றி வாழ்வில்லை
இசைத்திடுவோம் இனியநாதமென
இணைத்திடும் இனிதாய்
இரு மன திருமணம்

பாசம் பகிர்ந்திருந்தால்
பண்பு குலையாது
எண்ணங்கள் பரிமாறப்பட்டால்
மதித்தல் மேலோங்கும்
அன்பு அரணாய் உயர்ந்தால்
அரவணைத்துக் காத்திருக்கும்

அதுவே குற்றம்காணில்
குறுகிப்போம் நல்லுறவு
பற்றற வழிசமைக்கும்
சொற்கள் சுருள வைக்கும்
தொட்டதெல்லாம் துயராகும்
சுதந்திரம் எதுவெனக் கேட்கும்
கட்டவிழக் காத்திருக்கும்

கட்டல்ல திருமணம்
கண்டுணரும் அன்பின் வேரில்
புரிந்துணர்வின் கிளைகளில்
விட்டுக் கொடுப்பின் இலைகளில்
சந்ததிகள் செழித்தோங்கி
காலத்தில் பதிபடுவது
புரிந்தவருக்கோ கொள்ளையின்பம்
இழந்தவர்க்கோ நரகம்!
வி.அல்விற் .
29.01.2013.

கருத்துகள் இல்லை: