சனி, 25 அக்டோபர், 2014

பொய் முகங்கள்.

இடுங்கிய கண்களின் பின்னுள்ள
பொறாமைச் சிரிப்பும்
அரவத்தின் நஞ்சுப்பையொத்த
மனம் கறுத்த பொய் நிரப்பல்களும்
பச்சோந்தி வழிபற்றும் 
நிறமற்ற தோல்களும்
பொய்யை உண்மையாக்கும்
உண்மையைப் பொய்யாக்கும்
வார்த்தை வசீகரங்களும்....
நிறைமதி அழகெனவும்
கதிரொளிப் பரப்பெனவும்
அன்பின் உருவெனவும்
தியாகத்தின் சிகரமெனவும்
இரக்கத்தின் ஊற்றெனவும்
புகழ்ந்து ஓதப்படுகின்றன
அதிட்டமுள்ள காலம் வரை.
வி. அல்விற்.
25.10.2014.

கருத்துகள் இல்லை: