வெள்ளி, 17 ஏப்ரல், 2015

கறுப்பு வெள்ளையில்.

நிறமூட்டப்பட்ட மனிதர்கள் நாங்கள் 
கறுப்பு வெள்ளையில் 

பிறப்பின் மகிழ்வு 
சுருள்களாக நீள்கையில்
வானவில் வண்ணங்களில்
ஆங்காங்கே தெறித்து
வீழ்கின்றோம்

உணர்வுகளின் வீச்சுகள் 
வார்த்தைகளாகி
கறைபடுத்திப் போகின்றன
வாழ்க்கையை 

ஏற்கவும் மறுக்கவும்
சகிக்கவும் தூக்கி எறியவுமென
சொல்ல முடியாத நிறங்களில் வடிந்து
கருமைக்கு
மாறிக் கொண்டிருக்கையில் 

புழுதி அடக்கிப் போகும்
கோடை மழை போல வந்து
கழுவிப் போட்டு

வெள்ளையாக்கிப் போகிறது

மரணம்.

வி. அல்விற்.

16.04.2015.

கருத்துகள் இல்லை: