திங்கள், 27 ஏப்ரல், 2015

ஓட்டம்.

சென்றது யார் 
செல்வது யார் 
கடந்தவர் யார் 
கடப்பவர் யார்

இதில் இன்னும் 

நிற்பவர் யார்?
சுயநலமின்றி.

திறவாக் கதவுகளைத் 
தட்டிக் கொண்டே இருக்கிறோம் 

தெரிந்தவர்கள் 
தெரிந்தவர்களை
முந்திக்கொண்டு 
ஓடிக்கொண்டிருக்கின்றார்கள்
தெரியாதென்று நினைத்தபடி.

வி. அல்விற்.

23.04.2015.

கருத்துகள் இல்லை: