மரம் உதிர்க்கும்
பழுப்பிலைகள்
உரசிச் செல்கின்றன
பனிக்கால வெண்ணுதிர்வும்
குளிர் காற்றின் வெடவெடப்பும்
அசைத்துச் செல்கின்றன
மதர்த்த கோடை
தளர்த்திய ஆடைகளுடன்
வெளியேறும் மனிதர்களுடன்
திரும்பாது கடக்கின்றது
நினைவுச் சங்கிலியுடன்
இன்னும் நான் பிணைந்தபடி.
வி. அல்விற்.
26.04.2015.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக