திங்கள், 27 ஏப்ரல், 2015

பிணைப்பு.

மரம் உதிர்க்கும் 
பழுப்பிலைகள்
உரசிச் செல்கின்றன 

பனிக்கால வெண்ணுதிர்வும்
குளிர் காற்றின் வெடவெடப்பும்
அசைத்துச் செல்கின்றன 

மதர்த்த கோடை
தளர்த்திய ஆடைகளுடன் 
வெளியேறும் மனிதர்களுடன்
திரும்பாது கடக்கின்றது

நினைவுச் சங்கிலியுடன்
இன்னும் நான் பிணைந்தபடி.

வி. அல்விற்.

26.04.2015.

கருத்துகள் இல்லை: