செவ்வாய், 5 ஜனவரி, 2016

புதிய நாள்.

உள் வந்து என்னை உந்தும்
இந்த பெருஞ்சுமைகள்
நீங்குவதாயில்லை.

மேன்மைக்காலத்து மகிழ்வுகளும்
தடுமாறிப் போகும் அனுபவங்களுமாக
காலமாற்றம் போல
அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன
சம்பவப் பொதிகள்.

வரவுகள் பார்த்தென்ன
கணக்குகள் போட்டென்ன
நிதானமாவதற்குள்
இன்னொரு அனுபவம்
வாய்திறந்து நிற்கிறது
தீர்வுக்காக.

இதோ!
இந்த இரவு நல்லிரவாகட்டும்.

நாளையும்
நேர்நின்று பேசும் நாளொன்று
புதிதாகப் பிறக்கட்டும்.

வி. அல்விற்.
23.12.2015.

கருத்துகள் இல்லை: