புரியும் மொழியில்
பேசிப் பார்க்கிறேன்
புரியாத விடயத்தைப்
புரிந்து கொள்ளும்படி.
தாவும் மனதை
தரையிறக்க இயலாமையால்
தவறவிட்டு நொந்து கொள்ளுகிறாய்
தனித்து நின்றபடி.
யாசித்து நிற்கிறேன்
அமைதியில் தெளிவுற்று
மீண்டு வரும்படி.
என் செய்வேன்?
எனதுயிரே!
எனக்கும் வலிக்கிறது.
நெற்றி நோவெடுக்க
உச்சி பிளந்து கொள்ளும்படி
சிந்தித்துக் களைக்கிறேன்
எவ்வழி தவறென்று
இன்னும் புரியவில்லை!
வி. அல்விற்.
27.12.2015.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக