செவ்வாய், 5 ஜனவரி, 2016
உயிர்
உனது உயிர்ப்பறவை
இன்று
என்மீது அமர்ந்திருக்கிறது
நம்பிக்கை கொண்டு.
வெளிறி விழித்திருந்த
நீண்ட இரவுகளுடனான
இப்பயணத்தின் பின்
களைத்திருக்குமதை
இரு கைகளில் தாங்கி
நெஞ்சோடு
அணைத்துக் கொள்ளுகின்றேன்.
என் உயிரே!
உனது தூக்கத்தை
நான் வாங்கியிருக்கிறேன்
நீ சற்று ஓய்வெடுக்கும்படியாக
உனது துக்கங்களை
வழித்தெறிந்து விட
சபதம் செய்துள்ளேன்
இன்னுமென்ன?
உன் நுதலில் நீண்டதொரு
முத்தமிட்டு
என்னோடு
உன்னுயிர் தங்கி விடும்படியாக
சத்தமிட்டுச் சொல்லுகின்றேன்.
வி. அல்விற்.
06.12.2015.
உனது உயிர்ப்பறவை
இன்று
என்மீது அமர்ந்திருக்கிறது
நம்பிக்கை கொண்டு.
வெளிறி விழித்திருந்த
நீண்ட இரவுகளுடனான
இப்பயணத்தின் பின்
களைத்திருக்குமதை
இரு கைகளில் தாங்கி
நெஞ்சோடு
அணைத்துக் கொள்ளுகின்றேன்.
என் உயிரே!
உனது தூக்கத்தை
நான் வாங்கியிருக்கிறேன்
நீ சற்று ஓய்வெடுக்கும்படியாக
உனது துக்கங்களை
வழித்தெறிந்து விட
சபதம் செய்துள்ளேன்
என்னோடு
உன்னுயிர் தங்கி விடும்படி.
வி. அல்விற்.
06.12.2015.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக