ஞாயிறு, 1 நவம்பர், 2015

பிரிய சிசுவே!

கனத்திருக்கும் மௌனத்தினூடே
உனது மொழி வாய் திறக்கின்றது
கண்களினூடே அவை உள்ளிறங்குகின்றன
விட்டு விட முடியாத நினைவுகளான
நீண்டுயர்ந்த அடர் மரங்கள் கொண்ட
காட்டு வழியினூடே
நானும் பயணிக்கிறேன் உன்னோடு.

ஏனென்றால் நீ எனது உயிராயிருக்கிறாய்
எதற்கும் இணையற்ற மேனிலையுற்றிருக்கிறாய்
எனக்கென்றே இருக்கும் சொந்தமாயிருக்கிறாய்
வான் பொழியும் மழைத்தூறல்களும்
கம்பீரமாக இறங்கிவரும் கதிரவனும்
உனைவிட மேலானதாயில்லை எனக்கு.

ஓ! என் பிரிய சிசுவே!

உனைவிட்டு நான் நீங்குவதில்லை
என் ஆயுள் உன்னால் நீடிக்கட்டும்
எனதருகாமை உன்னை வளப்படுத்தட்டும்
உலகறிந்து உன் வெற்றிகள் குவிகையில்
தசை சுருங்கிய சிறு கால்களுடன்
உன் பின்னே அன்றும் நடப்பேன்.

வி. அல்விற்.
01.11.2015.

கருத்துகள் இல்லை: