என்னைப் பணிவுறச் செய்கிறாய்
ஒரு குழந்தையைப் போல.
என்னை நடத்திச் செல்லுகிறாய்
ஒரு ஆசானைப்போல.
வழியெங்கிலும் முத்துக்களைப்போட்டபடி
நடந்து கொண்டேயிருக்கிறேன்
உனக்கான எனது கேள்விகளை
ஆச்சரியத்துக்குள்ளாக்குகிறாய்
வியத்தகு விளக்கங்களுடனான
எதிர்க் கேள்விகளுடன்.
என் பிரிய சிசுவே!
இதோ! என் நடை தளர்கிறது.
ஆகாயத்தை விமரிசிக்கும் துணிவு எனக்கில்லை
நீ திரும்பி நடக்கையில்
போட்டவற்றைப் பொறுக்கியெடுப்பாயெனவும்
சேர்த்து வைத்து மகிழ்வாயெனவும்
நம்பிக்கை கொண்டு சாய்ந்திருக்கிறேன்
இக்கணத்தில்.
வி. அல்விற்.
17.11.2015.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக