ஞாயிறு, 1 நவம்பர், 2015

மீளல்

இதோ! இலைகளையுதிர்க்கின்றன
சிலநாட்களுக்கு முன்னர்
உனது காலடி ஓசைகளையும்
ஆரவாரங்களையும்
கேட்டபடி காய்த்துக் குலுங்கியிருந்த
பசுமை போர்த்திருந்த மரங்கள்.

நீ இப்போது இங்கே வருவதில்லையென
இவை முணுமுணுத்து
முறைப்பாடிடுகின்றன

ஓ! நீயும் முதிர்ந்து விட்டாயா
இவ்விலைகளைப் போல?

ஆனாலும் பார்!
இவை உதிர்க்கும்
ஆனாலும் இடம் மாறாது
மௌனித்திருக்கும்

என் பிரிய சிசுவே!

குருவிகளின் கூடு போன்ற
உனதிடம் இங்கேயுள்ளது
மீண்டு வந்துவிடு
காத்திருப்பன இம்மரங்கள் மட்டுமல்ல…

வி.அல்விற்.
30.10.2015.








கருத்துகள் இல்லை: