திங்கள், 23 நவம்பர், 2015

உனது வாழ்வு.

கனவூறிய வாழ்வு வெளியில் மிதப்புற்றிருந்தேன்
அசைவற்று நீந்தும் பறவைபோல
எது கொண்டு அதையளப்பேன்
உனக்கதை விளக்க?
மதிப்பிடற்கரிய உனது சொல்லோவியங்களில்
எனது விழிகள் இன்று நிறைந்திருக்கின்றன

இதோ!
உன் மொழிவழி எனதுயிர் துளிர்த்திருக்கிறது
மீண்டுமொருமுறை.

இனி அது தங்கியிருக்கும். 

ஓ! என் பிரிய சிசுவே!

என் கரம் கோர்த்துக் கொள்!
அது கூறும் வார்த்தைகளை உணர்ந்து கொள்!
என் பார்வைகளைப் பற்றிக் கொள்!

எனது விழிகளில் நிறைந்திருப்பது நீரல்ல; 
உனது வாழ்வே!

வி. அல்விற்.

13.11.2015.

கருத்துகள் இல்லை: