நான் இப்போது அழகாயில்லை என்கிறார்கள்
தலைமுடிகள் உதிர்ந்தும் நிறம் மாறியும்
விரல்களில் நரம்புகள் புடைத்துமுள்ள
வயோதிபனை ஒத்தவனாயிருக்கிறேன் என்கிறார்கள்
மகா பிரபுக்களே!
நான் மகிழ்ச்சியாயிருக்கிறேன் என்பது
உங்களுக்குத் தெரியுமா?
உதிர்ந்தவையும்
பூச்சி அரித்தவையும்
பிடுங்கப்பட்டவையும் போக
என்னுடன் சேர்ந்திருப்பவையோடு
நான் இன்னும்
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
அழகாக.
வி. அல்விற்.
09.11.2015.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக