என்ன உறவு இது?
கேட்டா பெற்றோமிதை?
கடலின் ஆழம்போலவும்
அதன்மேல் ஓயாது பயணிக்கும் அலைகள் போலவும்
பிரிவற்றிருக்கப் பணிக்கப்பட்டிருக்கிறோம்
நீயும் நானும்.
மறைந்திருக்கும் மரவேர்களிலிருந்து
மண் பிளந்து வெடித்தெழும் சிறு கன்றுகள் போல
உணர்வுகளால் பிணைக்கப்பட்டிருக்கிறோம்.
இதோ! உன்னோடிருக்கும் இக்கணங்கள்
இப்பிறப்பிற்காக நான் பெற்ற வரங்களாகக் கருதுகிறேன்
என் பிரிய சிசுவே!
இவை நாளை மீட்கப்படக்கூடும் உன்னால்.
அந்நேரம்,
நான் உன் சிசுவாய்ப் பிறந்திடும்
வரம் கேட்பேன்.
வி. அல்விற்.
21.11.2015.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக