திங்கள், 23 நவம்பர், 2015

எங்ஙனம் இப்பூமி முடிவுறும் ?

இந்தப் பிரபஞ்சத்தின் இப்பகுதி முடிவடையுமோ?
எப்படியாகும்?

முழுவதுமே நீராலே மூழ்கிப்போய்?
காற்றலைவில் சிதறுண்டு போய் சிறு துகள்களாகி?
ஒரு சிறு தீக்குச்சியில் சாம்பல் மேடாகி
பூமியின் கண்படு நுனியும் வானின் எல்லையும் 
தூரத்தில் தொட்டுவிட்டபடி?
நிலம் பிளவுண்டு அனைத்தையும் விழுங்கி 
வெறும் பரப்பாகியபடி?

எங்ஙனம் இப்பூமி முடிவுறும்?

எத்துணை தைரியசாலிகள் நாங்கள்?

பதில் தெரியாத 
கேள்விகளோடு விரைந்து கொண்டிருக்கிறோம் 

இம்மண்ணின் ஒரு பகுதியையேனும்
சொந்தமாக்கும் அவசரத்துடன்.

வி. அல்விற்.

22.11.2015.

கருத்துகள் இல்லை: