புதன், 24 அக்டோபர், 2012

பரந்திருக்கும் பூமிப் பந்தின்
பசுமை நிறையோர் புள்ளிக்குள்
படபடத்துச் சிறகடித்து
பரவசமூட்டும் சிறுபுள்ளாய்
பவனி வந்த காலமது
பாழ் பட்ட யார் கண்ணோ
பட்டு நிலம் வீழ்ந்தொடிய
பகை சூழ்ந்து நகையெழுப்பி
பலியெடுத்த வெஞ்சினம்
பார்த்திருந்த விழி மடல்கள்

பதறிப் பரிதவித்து
பாரமாய் மூட மறுத்து
பாதியிரவில் இன்றும்
பீதியில் திறக்கும்

கருத்துகள் இல்லை: