பசுமை நிறையோர் புள்ளிக்குள்
படபடத்துச் சிறகடித்து
பரவசமூட்டும் சிறுபுள்ளாய்
பவனி வந்த காலமது
பாழ் பட்ட யார் கண்ணோ
பட்டு நிலம் வீழ்ந்தொடிய
பகை சூழ்ந்து நகையெழுப்பி
பலியெடுத்த வெஞ்சினம்
பார்த்திருந்த விழி மடல்கள்
பதறிப் பரிதவித்து
பாரமாய் மூட மறுத்து
பாதியிரவில் இன்றும்
பீதியில் திறக்கும்
பாரமாய் மூட மறுத்து
பாதியிரவில் இன்றும்
பீதியில் திறக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக