புதன், 24 அக்டோபர், 2012

பெற்ற தாய் கலங்கி நிற்க உடன்
பிறந்தவர் மௌனித்திருக்க
பொற்றமிழ் பேண நீ
பொறியாய்க் கிளம்பினாயே!
பெறு நல் செய்திக்காய்
பொறுமையாய்க் காத்து நிற்க
பெற்றதோவும் வித்துடல்
பொறுக்கவில்லையே!!!
பொறி கலங்கியுனைப்
பெற்றவள் இன்று
போக்கற்று நிற்கிறாளே!!

கருத்துகள் இல்லை: