புதன், 24 அக்டோபர், 2012

சோகங்கள் என்றும்
தொட்டதில்லை முகத்தில்
சொல்லில் வலிமை செயலைப் போலே
எம்பி மிதித்து மிதியுந்தில் மறைந்து பின்
காற்றாய் பறந்து ஈருருளியில்
ஈற்றில் வானம் தொட்டதிர்ந்த நேரம்
என் கண்களின் ஓரம் சிறு வெள்ளம்
எரியுண்டு பிளவுண்டு
துளையுண்டு அறுபட்டுப்
போனவை

உம் உடலங்களல்ல;
எம் மனங்கள்!
வீணா!
உம் ஈகம் என்றும் வீணா!

கருத்துகள் இல்லை: