கால விருப்பு.
விழுதுகள் இன்னும்
தொங்கிக் கொண்டுதான் இருக்கின்றன
தன்னிச்சையாய்
ஆடுவதற்கும் ஆளின்றி
ஆலமரத்தின் அடியில்
பஞ்சாயத்துப் பேச எவருமில்லை
நிழல் தரும் குளிர்மையத்
தேடுவாருமில்லை
மழை பொய்த்த அனலும்
தெருவிறைத்த புழுதியுமாய்
மூடக் கிடக்கின்றது மரம்
உதிர்ந்த இலைகளின் இழப்பில்
உரம் சேகரிக்க தூரவிருந்து பயணிகள்
வந்து போகின்றார்கள்
பண்ணிசைக்கும் பட்சிகளின்
தனிமை கலைக்கும் சுகத்தை
சுகிக்க மனமின்றி
தன்னோடு பேசுகின்றது
பொய்த்த மழை பொழியும்
காலவிருப்பில்.
வி.அல்விற்.
09.05.2014.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக