அடிமுதல் வேரென ஆழமாய்
பிடி கொண்டவோர் சேனை காண்
கடிநிலை பேதமை விழிகளில்
கொடு வதை கரித்தங் காடுதே
மடி கனல் கொளும் செந்நீர்க்களம்
இடியென சிரங்களில் இறங்குதே
முடியங் கிறக்கும் வரைதனில்
முடிகலை விதைகள் வீழ்ந்ததோ
"படி"யென உடலங்கள் பாடமாய்
வெடி கொண்டு வீழ்த்த சாய்ந்ததோ
கொடி கொண்டாங்கு நிமிர்ந்தவர்
உடுக்கைக்குக் கைகளும் இழந்தனரோ
முடியாண்ட வரலாறு முடியுமோ
குடியாளும் நிலைமை மீழுமோ
கடிறு போல மீண்டும் நிமிருமோ
விடை யளி காலம் ஊருதே- நம்
கொடு நிலை மூடிக் கொல்லுதே!
வி.அல்விற்.
24.05.2014.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக