புதன், 7 மே, 2014

ஆத்மா இழந்தவர்கள்.

மூச்செடுக்க முடியாது 
இவர்கள் திணறுவது 
அவர்களுக்கு வலிக்கவேயில்லை
மாறாகப் புன்னகைக்கின்றனர் 
கருமத்திலே குறியாயிருந்து 
முடிந்தவரை சுருட்டிக் கொள்ளுகின்றனர் 
சட்டை கிழிந்து தொங்குபவனிடமும் 
வியர்வையின் மணமும் 
பனிக் குளிரின் ஊடுருவலும் 
கைமாறப்படுகின்றன 
மீண்டும் இவர்களுக்காக
ஊதிப் பெருத்துக் கொண்டே போகின்றன
அவர்களின் கையிருப்புக்கள்
அவர்களின் சிரிப்பொலி
ஆணவத்துடன் எதிரொலிக்கிறது
முன்னை விட அதிகமாக
நிறங்கள் மாறிப்போன
ஆத்மா இழந்த
இவர்களின் சடலங்கள்
புலம் பெயருகின்றன
தலைகளைக் கையிலேந்தி.

வி.அல்விற்.
02.05.2014.

கருத்துகள் இல்லை: