என் சந்ததி.
இலைதுளிர்காலத்து நம்பிக்கையில்
இலையுதிர்காலத்தில் பழுத்துதிர்ந்து
குளிர் போர்த்தி உறைந்து நிற்கும்
மொட்டை மரத்தின் கீழுள்ள வேர்களைப் போல
நினைவுகளை நிரப்பிக் கொண்டிருக்கிறேன்
என் சந்ததிக்காய்
என் வாய் மொழியும் எழுத்துக்களும்
மழுங்கியிருக்கலாகாது
ஒவ்வொரு வார்த்தைகளும்
சாணை பிடிக்கப்பட்டிருத்தல்
கண்டிப்பான நியதிகளில் ஒன்று
என் குழந்தை என்னைப்போல
இருக்கவே மாட்டான்
அவனுக்கான சிந்தனைகளும் தனித்துவங்களும்
அவனுடைய ஆழுமையை அறிவிக்கும்
ஆனால் அதற்குள்
நான் கொடுத்தவைகள் மெருகேற்றப்பட்டிருக்கும்
இயல்பாகவே.
வி.அல்விற்.
01.05.2014.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக