சனி, 24 மே, 2014

வரம்

வானுக்கு ஏணி வைத்து நிலவுடைத்து 
முகிலிடையே ஆங்காங்கே 
ஒளி செருகிச் சிதறவிடும் 
சாகசம் கைகளில் தந்து விடு

சூரியனுக்கு வலை வீசி கட்டியிழுத்து 
பனிக்குவியலின்மேல் படுக்க வைத்து 
காலத்தைக் கலைத்து விடும் 
திறமையைக் கொடுத்துவிடு

வீணிற்கும் மானிடர் கொள்
மூச்சனைத்தும் நிறுத்திவிடும்
வரம் ஒன்று கொடுத்திடு
முடிவிலிப் பிரதாப வலிகளை
அடி கொண்டு தகர்த்து விட.

வி.அல்விற்.
21.05.2014.

கருத்துகள் இல்லை: