வானுக்கு ஏணி வைத்து நிலவுடைத்து
முகிலிடையே ஆங்காங்கே
ஒளி செருகிச் சிதறவிடும்
சாகசம் கைகளில் தந்து விடு
சூரியனுக்கு வலை வீசி கட்டியிழுத்து
பனிக்குவியலின்மேல் படுக்க வைத்து
காலத்தைக் கலைத்து விடும்
திறமையைக் கொடுத்துவிடு
வீணிற்கும் மானிடர் கொள்
மூச்சனைத்தும் நிறுத்திவிடும்
வரம் ஒன்று கொடுத்திடு
முடிவிலிப் பிரதாப வலிகளை
அடி கொண்டு தகர்த்து விட.
வி.அல்விற்.
21.05.2014.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக