வெள்ளி, 20 ஜூன், 2014

சமநிலை

அருவிகள் யார் கேட்டும் கொட்டுவதில்லை 
மழைத்துளிகள் அனுமதியுடன் நிலம் சேர்வதில்லை 
கடல் அலைகள் சொல்லிக் கொண்டு ஆர்ப்பதில்லை 
காற்று வழி கேட்டு அலைவதில்லை 
பருவகாலங்கள் மாற்றத்துக்குக் காத்திருப்பதில்லை 
இயற்கையின் பொதுமுறைச் சமநிலையை 
சைகைகளால் கைகோர்த்து சேர்ந்தே ஆள்கின்றன
பேதங்களும் வாதங்களும்
ஆதிக்கங்களும் அடித்து வீழ்த்துதல்களும்
துரோகங்களும் பல்லிளிப்புக்களும்
சொல்லவியலாச் சுயநலன்களுமாய்
பொதிகளைச் சுமந்து வருந்தி நலிந்து
முட்டி வலிக்க நிற்கின்றோம்
ஒருமைக்குள் வரவியலாமல்
மனிதர்களின் பெயரால்.

வி.அல்விற்.
11.06.2014.

Photo : அருவிகள் யார் கேட்டும் கொட்டுவதில்லை 
மழைத்துளிகள் அனுமதியுடன் நிலம் சேர்வதில்லை 
கடல் அலைகள் சொல்லிக் கொண்டு ஆர்ப்பதில்லை 
காற்று வழி கேட்டு அலைவதில்லை 
பருவகாலங்கள் மாற்றத்துக்குக் காத்திருப்பதில்லை 
இயற்கையின் பொதுமுறைச் சமநிலையை 
சைகைகளால் கைகோர்த்து சேர்ந்தே ஆள்கின்றன 
பேதங்களும் வாதங்களும் 
ஆதிக்கங்களும் அடித்து வீழ்த்துதல்களும் 
துரோகங்களும் பல்லிளிப்புக்களும்
சொல்லவியலாச் சுயநலன்களுமாய்
பொதிகளைச் சுமந்து வருந்தி நலிந்து 
முட்டி வலிக்க நிற்கின்றோம் 
ஒருமைக்குள் வரவியலாமல்
மனிதர்களின் பெயரால்.

வி.அல்விற்.
11.06.2014.

கருத்துகள் இல்லை: