வெள்ளி, 20 ஜூன், 2014

உயிர் மூச்சாகி.....

உயிர் மூச்சாகி.....

பாலைவன தகிப்பில் கண்ட 
பாயுமாற்று வெள்ளம் நீ 
பாய்ந்தெழுந்து முக்குளித்துனில் 
பாகாய்க் கரைந்திருந்தேன் 

நான் என்பது ஒழிந்து கொள்ள
நாற்புறமும் நீயாய் நிறைந்திருந்தாய்
நாதமென இசைத்துக் கொண்டு
நாட்டியமாட விட்டாய்

மேவியே நிற்கின்றாய் எனை
மூடியே பொழிகின்றாய்
மேனி சிலிர்த்து பெருமிதம் காட்ட
மெய் குலுங்கி நகைக்கிறாய்

என்ன பந்தமிது எனக்கும் உனக்கும்
எட்டப் பறக்கும் பட்டம் போல
விட்டு விடாதே நூலை எக்கணமும்
நூலறுகினும் பட்டம் கிழியினும்
மூச்சொன்று இங்கே நின்று விடும்.

வி.அல்விற்.
06.06.2014.

Photo : உயிர் மூச்சாகி.....

பாலைவன தகிப்பில் கண்ட 
பாயுமாற்று வெள்ளம் நீ  
பாய்ந்தெழுந்து முக்குளித்துனில்  
பாகாய்க் கரைந்திருந்தேன் 

நான் என்பது ஒழிந்து கொள்ள  
நாற்புறமும் நீயாய் நிறைந்திருந்தாய் 
நாதமென இசைத்துக் கொண்டு 
நாட்டியமாட விட்டாய் 

மேவியே நிற்கின்றாய் எனை 
மூடியே பொழிகின்றாய் 
மேனி சிலிர்த்து பெருமிதம் காட்ட 
மெய் குலுங்கி நகைக்கிறாய் 

என்ன பந்தமிது எனக்கும் உனக்கும் 
எட்டப் பறக்கும் பட்டம் போல 
விட்டு விடாதே நூலை எக்கணமும்  
நூலறுகினும் பட்டம் கிழியினும் 
மூச்சொன்று இங்கே நின்று விடும்.

வி.அல்விற்.
06.06.2014.

கருத்துகள் இல்லை: