வெள்ளி, 20 ஜூன், 2014

வலியும் வசந்தமும்.

வலியுடன் 
அசைந்து நடக்கிறாள் அப்பெண் 
முடிவில் கிடைக்கவிருக்கும் 
அளவிலா இன்பத்தைக் காண

ஆந்தைகள் அலறிக் கொண்டு 
தலைக்குமேலே பறக்கின்றன
புற்றிலிருந்து
வெளியசைந்து வரும் பாம்புகள்
அவளது கால்களை நெருங்க
மரமாய் நின்று நிதானிக்கிறாள்
இவளது பாதங்களை
அவை உரசிக் கொண்டு
இரைதேட
வேறிடம் நோக்கி நகருகின்றன

மழையில் குழைந்திருக்கும்
நிலப்பகுதியின் ஈரலிப்பு
நடையைக் கூட்ட
ஏதுவானதாயில்லை
இருப்பினும்
அவளைத் தடுப்பதற்கு
எதனாலும் முடியாது
மூர்க்கத்துடன் முன்னேறுகிறாள்

ஓரிடம் தேட வேண்டும்
அதற்குள் உட்பட்ட
காலப் பிரிவுக்குள்
மானிடப் பிசாசுகள்
பயந்து ஒதுங்கட்டும்
விசம் கொண்ட அனைத்தும்
விலகி ஓடட்டும்

தன்னுயிரோடு சுமக்கும்
கருவைப் பிரசவிக்க
ஓரிடம் தேட வேண்டும்

அதற்குள் வசந்த காலம்
வெளிச்சத்தை கொணர்ந்திருக்கும்.

வி.அல்விற்.
13.06.2014.

Photo : வலியுடன் 
அசைந்து நடக்கிறாள் அப்பெண் 
முடிவில் கிடைக்கவிருக்கும் 
அளவிலா இன்பத்தைக் காண
 
ஆந்தைகள் அலறிக் கொண்டு 
தலைக்குமேலே பறக்கின்றன 
புற்றிலிருந்து 
வெளியசைந்து வரும் பாம்புகள் 
அவளது கால்களை நெருங்க 
மரமாய் நின்று நிதானிக்கிறாள் 
இவளது பாதங்களை 
அவை உரசிக் கொண்டு 
இரைதேட 
வேறிடம் நோக்கி நகருகின்றன 

மழையில் குழைந்திருக்கும் 
நிலப்பகுதியின் ஈரலிப்பு 
நடையைக் கூட்ட 
ஏதுவானதாயில்லை
இருப்பினும் 
அவளைத் தடுப்பதற்கு 
எதனாலும் முடியாது
மூர்க்கத்துடன் முன்னேறுகிறாள்  

ஓரிடம் தேட வேண்டும் 
அதற்குள் உட்பட்ட 
காலப் பிரிவுக்குள் 
மானிடப் பிசாசுகள் 
பயந்து ஒதுங்கட்டும் 
விசம் கொண்ட அனைத்தும் 
விலகி ஓடட்டும்    

தன்னுயிரோடு சுமக்கும் 
கருவைப்  பிரசவிக்க 
ஓரிடம் தேட வேண்டும் 

அதற்குள் வசந்த காலம் 
வெளிச்சத்தை கொணர்ந்திருக்கும்.

வி.அல்விற்.
13.06.2014.

கருத்துகள் இல்லை: