இங்கேயே இருக்கிறேன்
அறிவின் புகுதலின்றி
அரங்கேறும் ஆர்வலரின்
நவரசம் காணவே
இன்னும் இருக்கிறேன்
பட்டு வீழும் நீர்த்துளியாய்
விழுந்து சேற்றுடன் கரைந்து
அழுக்காறாய் ஓடுகிறது
நேர்மையின் மூலம்
நியாயம் நியாயமாய் இல்லை
சட்டம் அமுலில் இல்லை
உண்மை பொய் பேசுகிறது
கயமை கபடமாடுகிறது
இங்கே எதுவும்
அதுவாயில்லை
அதுவாயில்லாத எதையும்
எதிர்க்க துணிவின்றி
நானும்
பார்வையாளருள் ஒருவராய்
இங்கேயே இன்னும்......
வி.அல்விற்.
08.06.2014.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக