அன்னைமடி மறுத்ததுண்டோ?
முலையூட்ட பேதம் பார்த்ததுண்டோ?
மூத்தவரைப் பொத்தி வைத்து
இளையவரை யொதுக்கினளோ?
கண்டவரும் கண்ணுவைக்கா(து)
கண்ணயரா தருகிருந்தவளே!
பொன்னுமணி போலவெல்லோ
பொன்னூஞ்சலில் தாலாட்டினளே!
கானமிசைத்திருந்த காலமும் போனதங்கே.
வானமளந்திருந்த வனப்பும் மறைந்ததங்கே.
மீந்து சுமந்துவந்த மென்னுடலும் சோர்ந்ததிங்கே!
மௌனத்தை மூடிக்கொண்டு மூலையிலே சாய்ந்ததிங்கே!
வேரறுந்து போனதெங்கே?
வெறுமனது வேகுதிங்கே!
பேரறிந்த உறவுகளேயிங்கே
பெருமரமாய் வீழ்ந்திருக்கே!
என்ன தான் விதைத்து வைத்தோம்?
எதைக்காத்து வளர்த்து விட்டோம்?
என்னவோ மதர்த்து நிற்க - முன்னால்
அறுவடைக்கு முடியவில்லை…….
வி. அல்விற்.
05.01.2017.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக