நிறமற்றோடும்
இந்நதியின் ஓட்டமென இருக்கிறாள்
நின் பிரிய சகி.
சுதந்திரமான அவள் பயணம்
வானத்தை அளந்துவரும்
ஒரு பறவைக்கொப்பானது.
மகிழ்தலும் மகிழ்வித்தலுமான
மெய்யுணர்வின் பாலுற்ற
ஒரு ஆடலுக்கிணையானது.
யாருக்கும் இடைஞ்சலற்ற
இவ்வமைதியான நெடுவழி
எங்ஙனமுன் பார்வைக்குள் சிக்கியது?
துக்கிக்காதே!
அவற்றை நின்றாய்ந்து வயலினிசைக்க
விருப்பற்றிருக்கிறாள்.
தனித்தலையவில்லை நின் சகி!
மௌனித்திருக்கிறாள்;
தன்னோடும் நினைவுகளோடும்.
வி. அல்விற்.
07.02.2017.
இது ilctamil.com வானொலிக்காக வழங்கப்பட்ட கவிதை.
நன்றி. திரு. முல்லை அமுதன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக