வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

விடுவிக்கப்படும் ஊர்.


மனிதர்களை வாழ மறுத்த அந்த
மூடப்பட்ட பாதை திறக்கப்படுகின்றது.

பார்வைகளைத் திரும்பப் பெற்ற
கண்கள் ஆவலில் அலைகின்றன.

அடைக்கப்பட்ட காற்றும்
மூடப்பட்ட கடலும்
பெருமூச்சு விட்டெழுகின்றன.

ஊரசைகிறது;
உறவுகள் பேசுகின்றன.

இன்னதென்றில்லாத வார்த்தைகள்
கடந்தகால
வெற்றிடங்களை நிரப்புகின்றன.

மகிழ்ச்சி நடனமிடுகின்றது;
சீர் வரிசைகள் தயாராகின்றன.

இதோ!
ஊர் நடக்கத் தொடங்குகின்றது
புதிய புடவை கட்டிக்கொண்டு.

வி. அல்விற்.
11.02.2017.






கருத்துகள் இல்லை: