மனிதர்களை வாழ மறுத்த அந்த
மூடப்பட்ட பாதை திறக்கப்படுகின்றது.
பார்வைகளைத் திரும்பப் பெற்ற
கண்கள் ஆவலில் அலைகின்றன.
அடைக்கப்பட்ட காற்றும்
மூடப்பட்ட கடலும்
பெருமூச்சு விட்டெழுகின்றன.
ஊரசைகிறது;
உறவுகள் பேசுகின்றன.
இன்னதென்றில்லாத வார்த்தைகள்
கடந்தகால
வெற்றிடங்களை நிரப்புகின்றன.
மகிழ்ச்சி நடனமிடுகின்றது;
சீர் வரிசைகள் தயாராகின்றன.
இதோ!
ஊர் நடக்கத் தொடங்குகின்றது
புதிய புடவை கட்டிக்கொண்டு.
வி. அல்விற்.
11.02.2017.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக